ஆவடி:
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட வெள்ளவேடு, பூந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர், செவ்வாபேட்டை, திருமுல்லைவாயில், கொரட்டூர், அம்பத்தூர் தொழில்பேட்டை, செங்குன்றம், மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தொடர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 20 வீடுகளில் நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளிகள் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 70-க்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா விற்பனை சோதனையில் 33 நபர்கள் மீது குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 48 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் ரூ. 1 லட்சத்து 50ஆயிரத்து 220 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்பா ன அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மேற்கண்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings