in

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரண்டி கார்டுடன் விலையில்லா மிதிவண்டி

கரூர்

கரூரில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாரண்டி கார்டுடன் கூடிய விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேலு துவக்கி வைத்தார்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசு பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை  மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் முதன்மை கல்வி அலுவலர் (கூடுதல் பொறுப்பு) கிருஷ்ணப்பிரியா வரவேற்புரை ஏற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்

.கரூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பதினோராம்  வகுப்பில் படிக்கும் 6397 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி   வழங்கப்பட உள்ளது.. இதன் மொத்த மதிப்பு ரூ.3,0829,680 ஆகும்.

ஒவ்வொரு மிதிவண்டிக்கும் வாரண்டி கார்டு வழங்கப்பட உள்ளது. முதல் தொடக்கமாக மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர்  தங்கவேல் விலையில்லா மிதிவண்டியை வழங்கி தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட கவுன்சிலர் அலமேலு மனோகரன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.கே. வேலுசாமி, தலைமை ஆசிரியர் சக்திவேல், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கும்பகோணத்தில் முதல் பெண் பேருந்து நடத்துனர்கள்

இந்து திருக்கோயில் சேவா அறக்கட்டளையின் ஆடி பவர்ணமி அன்னதானம்