in

வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை.. சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றம்

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ.தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது.

நீர்வரத்துக்கு ஏற்ப அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். கடந்த வாரம் நீர்வரத்து சீராக இருந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் அருவியில் குளிக்க வந்திருந்தனர். திடீர் தடையால் இன்பமாக குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை 14ம் தேதி வெளியீடு

கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு