கிழக்கு கோதாவரி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று காலையில் தல்லபுடி மண்டலத்தில் உள்ள தடிபுடி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கோதாவரி ஆற்றுக்குக் குளிக்கச் சென்றனர். இந்த நிலையில் காலை 8.30 மணியளவில் அவர்களில் 5 பேர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings