in

இலங்கை அரசைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!

Fisherman protest

மண்டபம்:

இலங்கை, ஒன்றிய அரசைக் கண்டித்து, மண்டபம் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தைத் துவக்கினர். இலங்கை கடற்படையினர் கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். வலைகளைச் சேதப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து கடலிலேயே படகுகளை விரட்டி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும், மண்டபம் மீனவர்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்தால் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: போக்குவரத்து இணை ஆணையர் பணியிடை நீக்கம்

சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட விமானத்தில் கோளாறு: உயிர் தப்பிய பயணிகள்