ராமேஸ்வரம்
இலங்கைக் கடற்ப்படையை கண்டித்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 29ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தற்பொழுது சிறையில் உள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க கோரியும், பாரம்பரிய முறையில் மீன் பிடிக்க இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த கோரியும் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் பகுதியைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் மாபெரும் கண்டன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings