சென்னை
மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றில் புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் நேற்று (1ம் தேதி) முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது.
இந்த புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையம் சார்பில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதாவது அசாம் மாநிலத்தில் இருந்து அல்தாப் அலி மற்றும் முஜ்பூர் அலி ஆகிய சசோதரர்கள் 2 பேர் நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள், தங்களை நுங்கம்பாக்கத்தில் விடும்படி கூறி ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிடாமல் வேறு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
அப்போது கூகுள் மேம் மூலம் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள தனது நண்பரின் வீடு அமைந்துள்ள பகுதியை சர்ச் செய்து கொண்டு நடந்தே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த2 பேர் அவர்களை மிரட்டி செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி முதல் வழக்காக செல்போன் பறிப்பு சம்பவம் வழிப்பறி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
பழைய சட்டத்தின்படி 392 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் புதிய சட்டத்த்ன்படி 304 (2) என்ற சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings