சென்னை
சென்னை மயிலாப்பூர் இந்து நிதி நிறுவன மோசடி வழக்கில் மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டி.தேவநாதன் யாதவ் இன்று கைது செய்யப்பட்டார்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.525 கோடி பணத்தை மோசடி செய்ததாக அதன் நிறுவனத் தலைவரும் மக்கள் கல்வி முன்னேற்றக் காக தலைவருமான டி.தேவநாதன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராக இருந்ததாகவும் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக சிவகங்கையில் தேவநாதன் போட்டியிட்டிருந்தார். தேர்தலில் போட்டியிட இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.305 கோடி என தெரியவந்தது.
இந்தநிலையில் மோசடி புகார் வழக்கை தமிழக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டையில் வைத்து தேவநாதனை இன்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings