ராஜஸ்தான் மாநிலத்தில் பவர்லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா (17), 270 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்தார்.
பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கோவாவில் நடந்த 33-வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதன் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.
இந்நிலையில், யாஷ்டிகா பயிற்சியின் போது 270 கிலோ எடையைப் பயிற்சியாளர் உதவியுடன் தூக்க முயன்றார். அப்போது பயிற்சியாளர் எடையை அவர் மீது விட்டபோது, அந்த எடையைத் தாங்க முடியாமல் அவர் நிலை தடுமாறியதில் மொத்த எடையும் அவர் மீது விழுந்ததால் கழுத்து உடைந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
GIPHY App Key not set. Please check settings