சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் தனது கணவரை இழந்துவிட்டார். இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த பாரதி (வயது 27) என்பவர் சிறுமியின் தாயாரை கடந்த ஏழாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளன. சிறுமியும் இவர்களுடன் வசித்து வந்தார்.
சிறுமியை பாரதி வளர்ப்பு தந்தை போல் கவனித்து வந்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தது போல் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியிடம் மாற்றம் தெரிந்ததை அறிந்த தாய் இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கருவைக் கலைப்பதற்காக சிறுமியை நைசாக பேசி பாரதி வெளியே அழைத்துச் சென்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் பாரதியை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கருவலூர் பகுதியில் இருந்த பாரதி மற்றும் சிறுமியை போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings