திருவெறும்பூர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜன் (வயது 33). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டு மொட்டைமாடியில் இன்று காலை ரவுடி சுந்தர்ராஜன் தலை துண்டுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனை கண்ட அவரது சித்தப்பாவும் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருவெறும்பூர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த திருவெறும்புர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார், சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருவெறும்பூர் போலீசார், சுந்தர்ராஜன் கொலையில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#UMurasuTV #crime #trichy #police
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings