சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் சாய்ராம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 4 அறைகள் முற்றிலுமாக தரைமட்டமாகி உள்ளன.
இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடி விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings