கடலூர்:
கடலூரில் நடைபெற்ற விழாவில் “அப்பா” என்ற பெயரில் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். “Aanaithu Palli Parent teachers Association” என்பதன் சுருக்கமே ‘APPA’ என்ற பெயரில் புதிய செயலி; தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, விழா மலர் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர்; “தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ.2,152 கோடியைத் தர மறுத்து ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நிதியை விடுவிக்கக் கோரினால் தமிழ் மீது பிரதமர் அக்கறை கொண்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை;எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரி அல்ல; எந்த மொழியைத் திணிக்க நினைத்தாலும் எப்போதும் எதிர்ப்போம். தேசிய கல்விக் கொள்கை மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான கொள்கை அல்ல; பள்ளிக் கூடத்தை விட்டுத் துரத்துவதற்கான கொள்கை; சமூக நீதியைச் சிதைப்பதாகத் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. 3-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு, 5-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு, 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பதை எப்படி ஏற்க முடியும்? 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களே வெளியேறலாம் என்று கூறுவதை என்ன சொல்வது?
ரூ.2,000 கோடி அல்ல, ரூ.10,000 கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என கூறினார்.
GIPHY App Key not set. Please check settings