வேலூர்:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த். இவர் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இவருக்கு தொடர்புடைய இடங்களில் பணம் வைக்கப்பட்டிருந்ததாக வெளியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் ரூ.11 கோடி தேர்தல் பறக்கும் படையும் வருமான வரித்துறையும் பறிமுதல் செய்திருந்தனர். தேர்தல் செலவுக்காக பணம் வைக்கப்பட்டிருந்ததாக கதிர் ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிற நிலையில் அமலாக்கத்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் இதில் நிகழ்ந்திருப்பதாகக் கூறி வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்த் எம்பி. வீட்டில்
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள கதிர் ஆனந்த் எம்பி. வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவருடைய ஆதரவாளரும், நண்பருமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் வீட்டிலும், தொழிற்சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings