ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 17ம் தேதி கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு, பொதுக்குழு கூட்டத்தில் அனைவரின் ஒப்புதலோடு செயற்குழு மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் கூட்டமைப்பின் தலைவராக சேகு பஷீர் அஹமது, துணைத் தலைவராக முகம்மது அஜிஹர் மற்றும் முகம்மது சுபைர், செயலாளராக சார்ப்ராஸ் நவாஸ், துணை செயலாளர்களாக பாசித் இலியாஸ் மற்றும் நெய்னா முகம்மது, பொருளாளராக முகம்மது ஜலீல், உதவி பொருளாளராக முகம்மது பரூஸ் ஆகியோர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் ஊரின் நலன் கருதி நகர பேருந்து நிலையத்துக்குள் தொலைதூர பேருந்து வந்து செல்ல வேண்டும், கீழக்கரை முதல் ராமநாதபுரம் வரை உள்ள சாலையை செப்பனிட வேண்டும், கீழக்கரை நகரின் அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
மதுக்கடைகள் கீழக்கரையில் அகற்றப்பட்டதற்கு பிறகு கள்ள மது விற்பனை மேலும் போதைப் பொருட்கள் ஊடுருவலை தடுக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது. வருங்காலத்தில் சிறந்த கல்வியாளர்களை, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது உள்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings