in

தலையங்கம்

இன்றும் கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்தா?

  தாட்கோ கடனிலும் தில்லு, முல்லா?

திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரி வட்டம் பழவேற்காடு பகுதி ஏரியிலும் கடலிலும் மீன் பிடித்து வாழும் மீனவர்கள், பட்டனவர்களாகவும், பட்டியலினமாகவும் உள்ளனர். அதில் பட்டியலினத்தவர்களுக்கு ‘தாட்கோ கடன்’ அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதில் தில்லு, முல்லு நடப்பது கூட சகஜம் தான். படித்த இளைஞர்கள் வரும்போது, அவர்களால் ‘பழைய ஊழல் மிகு உலகை’ சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதேபோல அதிகாரிகளுக்கு விசுவாசம் காட்ட ‘ஊர் தலைவர்கள் ஊரைக் கூட்டி கட்டப் பஞ்சாயத்து’ மற்றும் ஊரை விட்டு விலக்கி வைத்தல் ஆகிய தன்டணைகளை அளிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கெட்ட வார்த்தைகள் பேசி, சாதி இழிவு செய்யும் காவல் அதிகாரிகளுடன் இசைந்து போக முடிவதில்லை.  நீதிமன்றங்களும் அவைகளை எதிர்த்து ‘கடும் தன்டணைகளை’ வழங்கி வருகின்றன. 

அப்படிப்பட்ட ‘கொடூரம்‘ இப்போது அந்த பழவேற்காட்டின் ‘லைட் ஹவுஸ் குப்பத்தில்’ நடக்கிறது. இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் கிராமங்களில் கட்ட பஞ்சாயத்து வறுமையில் இருக்கும் நபர்களை ஏமாற்றுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரணத்தினால் இதற்கு உதாரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பத்தில் பட்டதாரி இளைஞர்  ஊழல் முறைகேடு, ‘கோளூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில்’ நடைபெறுவதைத் தட்டி கேட்டதற்காக பட்டதாரி இளைஞரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையாளரின் கவனத்திற்கு அந்தப் புகாரைக் கொண்டு சென்றுள்ளார்.
இதுவரை சரியான  சட்ட நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டும் முறை யாகப் பேசி சரி செய்து ஊரை விட்டு விலக்கிய நபர்களை ஊரில் அனுப்புவதற்கு பதிலாக, கட்டப் பஞ்சாயத்து பேசும் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பத்தை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு ஆதரவாக ஒரு காவல் அதிகாரி செயல்படுவதால் மீண்டும் அந்த பட்டதாரி இளைஞர் ராஜ் கமல் அவர் பிறந்து வளர்ந்த ஊருக்குள் போக முடியாமல் உள்ளது.
கோளூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தனக்கு ‘தாட்கோ லோன்’ இரண்டு லட்சத்து 98 ஆயிரத்து 640 ரூபாய் வந்திருப்பதை அந்த இளைஞர் அறிந்தார். அது மட்டுமல்லாமல் அவர் கிராமத்தில் 118 பேருக்கு இந்த தாட்கோ லோன் வந்திருப்பதையும் அறிந்தார். ஒட்டுமொத்த பணத்தையும் ஒரே நபரிடம் கொடுத்திருக்கிறார் அந்த வங்கி செயலாளர் திருப்பதி. அவர்களிடம் ஏன் அவரவர் அக்கவுண்டில் அதை போடுவது தானே முறை? என்றும் தனக்கு வந்த லோன் யாரிடம் இருக்கிறது? நான் கையெழுத்து போடாமல் அது எப்படி இன்னொ ருவர் வாங்க முடியும்? என்றும் இளைஞர் கேட்டதற்கு அந்த அதிகாரி ‘ஊர் கட்ட பஞ்சாயத்து கும்பலிடம்‘ சொல்லி அந்த இளைஞரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
வங்கிக்கு போனது தவறு மேனேஜரிடம் பேசியது தவறு, நீ ஊர் காலில், அதாவது ஒவ்வொ ருத்தர் காலிலும் விழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் பேரில் காலில் விழ மறுத்த பட்டதாரி இளைஞர் ராஜ்கமல் மற்றும் அவருடைய சகோதரரையும் அவருடைய தந்தையையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
இதற்கு மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும், வட்டார காவல்துறை உட்பட அரசு அதிகாரிகளும் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி கைகட்டி கூண்டில் பதில் சொல்ல வேண்டி வருமே? சம்பந்தப்பட்ட  ‘ஆதிதிராவிட அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சரும், காவல்துறை அமைச்சரும் கேள்வி கேட்கப்படுவார்களே?’

– தெ.சீ.சு. மணி

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

போக்குவரத்து சிக்னல்களில் நிழற்குடை: வாகனஓட்டிகள் மகிழ்ச்சி

அட்சியதிருதியை முடிந்ததும் உயர்வுகண்ட தங்கம் விலை