ஈரோடு:
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஈரோடு ராமலிங்கம். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை செய்து வருகிறார்.
எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் வீடுகளில் பலமுறை வருமான வரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் ஈரோடு ராமலிங்கத்தின் சென்னை, ஈரோடு, பெங்களூர் வீடுகளிலும் என தமிழ்நாட்டில் மொத்தம் 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் என்ற ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனங்களிலும் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings