கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கேளராவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலம் பிளவுபட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதால் பிளவுபட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வயநாடு விவகாரம் இன்னும் மக்களை மனதை விட்டு நீங்காமல் உள்ள நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் நிலம் பிளவு பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு அதிகாரிகள் இதன உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு பிளவிற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings