in

மும்பையில் ரூ.10 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

மும்பை தாதரில் உள்ள பிரபல கோவிலுக்கு அருகில் தனியார் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகப் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை சொகுசு விடுதியில் போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர்.

சொகுசு விடுதிக்கு இரண்டு மர்ம நபர்கள் இரவு நேரத்தில் போதைப்பொருளுடன் வந்தனர். அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 5.4 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.08 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிடிபட்டவர்கள் மும்பை கைவண்டியைச் சேர்ந்த ஜஹாங்கிர் ஷாஹா ஆலம் ஷேக் (29) மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த செனால் ஜூலம் சேக் (28) என அடையாளம் காணப்பட்டனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து இந்த கடத்தலுக்குத் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நடுவானில் மோதிய விமானங்கள்; 2 பேர் பலி – அமெரிக்காவில் பரபரப்பு

கணவனுக்கு கள்ளக்காதல் : குழந்தையை கொன்று பெண் தற்கொலை