புதுடெல்லி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியபோது ஜனாதிபதி உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
பாஜக கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் கட்சி தவித்து வருகிறது. மக்களவையில் ராகுல்காந்தி போல் செயல்படாதீர்கள். தகவல்களை சரிபார்த்து பேசுங்கள். ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings