in

CuteCute

சிம் கார்டுகள் அதிகம் வைத்துள்ளீர்களா… அப்போது இதை படிக்கவும்.

புதுடெல்லி

தொலைத்தொடர்புச் சட்டம் 2023ன் கீழ் நாடு முழுவதும் ஒருவர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை வைத்திருக்கலாம். அவற்றை பயன்படுத்தலாம்.  இந்தஎண்ணிக்கை சில இடங்களில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிகளை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதுபோன்று கூடுதல்கள் செல் எண்கள் வாயிலாக பல மோசடிகள் ஏற்படுவதாகவும், மோசடிக்கு பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சிம்கார்டுகள் மூலம் அடுத்த மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ள நிலையில் இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் உள்ளன. மோசடியில் ஈடுபடுபவர்கள் உங்கள் பெயரில் சிம் கார்டு பெற்றிருந்தால், அதனை அறிந்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இதற்காக சிறப்பு இணையதளத்தை தொலை தொடர்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதாவது www.sancharsathi.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆன்லைனில் மதுபானம் விற்பனை? டாஸ்மாக் கூறுவது என்ன…

தமிழக அரசின் மேலும் மேலும் ‘ஷாக்’… மக்கள் வாய்ஸ்