சென்னை:
விசிக மகளிர் அணி சார்பில் மதுவிலக்கு மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு கட்சியினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு அவர் அழைப்பு விடுத்தது திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார். அப்போது மதுவிலக்கு தொடர்பாக ஒரு தேசிய கொள்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸடாலினிடம் கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டியில், இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை என்பதை அண்ணா வலியுறுத்தியுள்ளார். கலைஞரும் வலியுறுத்தியுள்ளார். அதன்படி நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்த முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம்.
அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு உடன்பாடு உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தொடர்பாக முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings