சென்னை;
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க. அரசைக் கண்டித்து மகளிர் அணி சார்பில் நீதிப்பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்‘கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, பா.ஜ.க, மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3ம் தேதி தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறுகிறது. அப்போது தமிழக கவர்னரை சந்தித்து, மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings