சென்னை:
ஈரோடு கிழக்கு தொகதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (10ம் தேதி) தொடங்கியது. 13 மற்றும் 17ம் தேதிகள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, வேட்பாளராக திமுக மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க, தரப்பில் இதுவரை தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் யார் போட்டியிடப் போகிறார் என்பது அத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
அ.தி.மு.க., போட்டியிடாத நிலையில் தே.மு.தி.க., போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போதைய தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், முன்னாள் தே.மு.தி.க., நிர்வாகி ஆவார்.விஜயகாந்த்துக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் இருக்கும்போதே அவர் தி.மு.கவுக்கு மாறிவிட்டார். தற்போது தி.மு.கவில் போட்டியிடும் அவரை பழி தீர்க்க, தே.மு.தி.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க., தலைமை முடிவு வெளியான உடன், தே.மு.தி.க.,வும் தங்கள் முடிவை அறிவிக்க உள்ளது. தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்புள்ளதாக, கட்சியினர் கூறி வருகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings