நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரிடம் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான என்.தளவாய்சுந்தரம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்.
மேலும் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் நாகர்கோவில், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடை தீர்க்கும் வகையில் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து டேங்கில் நிரப்பி விநியோகம் செய்யப்பட்டது. இதில் மாநகராட்சி உறுப்பினர் அக்சயா கண்ணன், வழக்கறிஞர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings