in

ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த திண்டுக்கல் தாலுகா போலீசார்

திண்டுக்கல்:

திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லதா (வயது48). இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இறந்து விட்டதாக மதுரை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்த லதாவை பற்றி எந்த விவரமும் தெரியாததால் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவலர்கள் மதுரையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இறந்த லதாவின் உடலை நல்லடக்கம் செய்தனர். இந்நிகழ்வை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்துக்கு 2 நாட்கள் ரெட் அலார்ட்

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்