சென்னை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம் ஜி.கே.எம். காலனி 27வது தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும் கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பெரியார் நகர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். சென்னையில் சிறிதளவு மழை செய்தாலே தண்ணீர் தேங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே என்று கேட்டதற்கு,சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். பருவமழைக்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். எப்பேர்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராஎ உள்ளது என்றார்.
அப்ப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வழுத்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதிலில், வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings