நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பண்டைய மன்னர்கள் காலத்தில் தூக்கு தண்டனை வழங்கும் போது தூக்கு தண்டனையை நிறவேற்றும் பணியாளர்களுக்கு மன்னரால் வழங்கப்பட்ட இடம் தான் ஆரச்சார் நிலம். 52 ஏக்கர் கொண்ட இந்த இடம் மன்னர்கள் காலத்திற்கு பிறகு சம்பந்தபட்ட மாநில அரசுகளின் கட்டுபாட்டில் வந்துவிட்டது.
அரசின் நிர்வாக சீர்கேட்டால் நாகர்கோவில் உள்ள இந்த ஆரச்சார் நிலங்களை அதிகாரிகள் உதவியுடன் தனி நபர்கள் கைவசம் வந்துள்ளது. தற்போது அந்த நிலங்களை தனி நபர்கள் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
அதை தடுத்து நிலத்தை மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என கூறி தனி நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்காத தமிழக அரசை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்து தமிழர் கட்சி மாவட்டத்தலைவர் ராஜன் தலைமையில் இந்து தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமடங்கள், திருக்கோவில் பாதுகாப்பு தலைவர் சங்கர்ஜி, மாநிலச் செயலாளர் ஈசான சிவம் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளர் அம்பிளி கண்ணன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் செந்தில்நாதன் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் சதீஷ், பிரசாந்த், ஆனந்தி, சுனிதா, தவசி, பிரதீப், பெருமாள், லிதியா மற்றும் இந்து தமிழர் கட்சி நிர்வாகிகள், ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்,
ர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings