வேலூர்,
வேலூர் அடுத்த காட்பாடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு யாசகர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பாபு ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார்.
இந்த நிலையில் உடல் நிலை குறைவு காரணமாகக் கடந்த 15 ஆம் தேதி சிகிச்சைக்காக அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து தப்பினார் .
இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்ட நிலையில் தப்பி ஓடிய பாபு ஷேக்கைகாவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings