in

சர்ச்சை பேச்சாளர் விஷ்ணுவுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு ஜாமீன்

சென்னை

சென்னையில் அரசுப்பள்ளியில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு ஜாமீன் கிடைத்தது.

சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் முன்ஜென்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசினார். அவரது இந்த பேச்சு பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மகாவிஷ்ணு மீது புகார் அளித்தனர். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். 

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஒருமாத போராட்டத்திற்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்பு உத்தரவிட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

2021ம் ஆண்டுக்கு பிறகு 1.39 லட்சம் பேருக்கு வேலை: தமிழக அரசு

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்