கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கள்ளச்சாராயமும் திமுகவின் அடிமட்டத்தில் இருக்கின்ற தலைவர்களும் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள். இன்று கள்ளக்குறிச்சி பகுதியில், காவல்துறையினர் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.
அந்த வீட்டில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளும் இருந்தது. இந்த சம்பவம் ஏதோ கிராமப்புறத்திலோ அல்லது மலைப்பகுதியிலோ நடைபெறவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் நடந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்து 150 மீட்டர், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழக பாஜக இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கொண்டு போய் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டுக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து முதல்கட்டமாக தமிழகத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings