in

CuteCute

ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.க்கு சென்னை ஆணையர் பாராட்டு

சென்னை

சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்தவர் ரோகித் ராஜ்.  பிரபல ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலை வழக்குகளும், வழக்குகளும் உள்ளது. 3 வழக்குகளில் இவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் சிமெட்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று அதிகாலை காவலர்கள் சரவணகுமார், பிரதீப் ஆகியோருடன் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி சுற்றி வளைத்தார். போலீசாரை கண்டதும் போலீசாரை தாக்கிவிட்டு அந்த ரவுடி தப்பியோட முயன்றான்.

அப்போது அவனை எஸ்.ஐ. கலைச்செல்வி  துப்பாக்கியால் சுட்டார். இதில் அவனது வலது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரவுடியை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பியோட முயன்ற கொலை குற்றவாளியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்வியை சென்னை காவல் ஆணையர் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிராவிடன்ஸ் கல்லூரியில் ஐந்துநாள் சர்வதேசஆய்வுமுறை பயிற்சிபட்டறை

தரமான கல்விக்கான அளவுகோலை தமிழகம் நிர்ணயித்துள்ளது: முதல்வர்