விழுப்புரம்:
சிபிஎம் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்டவற்றின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக மாபெரும் பேரணியும் நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் விழுப்புரம் மாநாட்டில் இன்று பேசிய கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது; ஆகையால் தம்மை மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். கட்சியின் விதிகளின்படி 72 வயதாகிறவர்கள் கட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது. ஆகையால் எனக்கு கட்சிப் பதவி வேண்டாம் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து சிபிஎம் கட்சியின் 80 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு கூடி விவாதித்தது. அப்போது சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ.சண்முகம், புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யார் இந்த சண்முகம்?
தற்போது சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறார் பெ. சண்முகம். மாணவப் பருவம் முதலே இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பயணிப்பவர். மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தியவர். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் பெ. சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings