in

ஆவடி போலீல் கமிஷனர் எல்லையில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

பூந்தமல்லி:

ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 12 க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தனம்மாள் மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், நுண்ணறிவு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமூக சேவகர் லாரன்ஸ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் திருமுல்லைவாயல் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் அன்புச்செல்வி போக்குவரத்து புலனாய்வு ஆவடி இன்ஸ்பெக்டராகவும், ஷோபா தேவி  பட்டாபிராம் காவல் நிலைய அனைத்து மகளிர் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், விஸ்வநாதன் எண்ணூர் காவல் நிலைய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மணலில் நியூ டவுன் சட்டம் ஒழுங்கு பிரிவு  போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு  சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக கிருஷ்ணன், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக வேலு, பூந்தமல்லி காவல் நிலையத்தில் இருந்து நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பிரபுவும் மற்றொரு நுண்ணறிவு இன்ஸ்பெக்டராக முருகானந்தமும், பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து சுகுணா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட உத்தரவுகளையும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவு மூலம் தெரிவித்துள்ளார்

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மின் பகிர்மான கழகத்தில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3லட்சம் மோசடி செய்தவர் கைது