in

வேலூர் ஆண்கள் சிறையில் செல்போன் பறிமுதல்!

வேலூர்

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் மண்ணில் புதைக்கப்பட்ட செல்போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர்.

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் மத்திய ஆண்கள் சிறை உள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சிறைக்காவலர்கள் தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள 6-வது பிளாக்கில் சிறைக்காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மண்ணில் புதைக்கப்பட்ட செல்போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர். இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் ஜெயிலர் துரை புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் சிறையில் செல்போனை பயன்படுத்தியவர்கள் யார் ? மண்ணில் புதைத்து வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆந்திராவில் மகனைத் துண்டு, துண்டாக வெட்டிக் கொன்ற தாய்

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி!