நீலகிரி:
மோடி ஆட்சிக்கு எதிரி சந்திரபாபு நாயுடுவோ, நிதீஷ் குமாரோ அல்ல. ஆர்.எஸ்.எஸ் தான் என்று குன்னூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராசா எம்பி. கூறினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா 4,73,212 வாக்குகள் பெற்று சுமார் 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வந்த எம்பி ராசாவிற்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், இனி வரும் காலங்களில் தமிழ் மொழியையோ தமிழ் மக்களையோ வஞ்சிக்க முடியாது.
மோடி சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை பார்த்து பயப்படுகிறோரோ இல்லையோ. மதிப்புக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சிம்ம சொப்பனமான திகழ்ந்து வருவதால் அவர் பயப்படுகிறார் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மோடி ஆட்சிக்கு எதிரி ஆர்.எஸ்.எஸ் தான்.ஆர்.எஸ்.எஸ் – க்கு, மோடி பிரதமர் ஆனது பிடிக்கவில்லை. அவர் தனி மனித தாக்குதல் வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று அவருடைய பத்திரிக்கையே எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings