சண்டிகார்,
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவராக இருப்பவர் அனோக் மிட்டல் (35). தொழிலதிபரான இவருடைய மனைவி லிப்சி மிட்டல். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அனோக் மிட்டலுக்கு 24 வயதுடைய இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனை லிப்சி கண்டுபிடித்து விட்டார். இதனால், அவரை தீர்த்துக் கட்ட அனோக் முடிவு செய்துள்ளார். இதற்காகக் காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மர்ம கும்பல் லிப்சியை கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை திருடியென்றனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி காவல் ஆணையாளர் குல்தீப் சிங் சாஹல் கூறும்போது, இந்த சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டிய முக்கிய நபராக அந்த பெண்ணின் கணவர் இருக்கிறார். கூலிப்படையினருக்கு ரூ.2.5 லட்சம் பணம் தரப்படும் என பேசி அனோக், ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்திருக்கிறார் என்றார்.
இதன்பின்னர், அனோக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில், அனோக்கின் காதலி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவனே கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings