குற்றாலம்:
கோடை மழை பெய்த நிலையில் குற்றால அருவியில் எதிர்பாராத விதமாக இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாளத்தில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தெறித்து ஓடிவந்தனர்.
இந்த வெள்ளப்பெருக்கு பெருக்கெடுத்து ஓடிவருவதை பார்க்கும்போது மழைக்காலத்தை தாண்டிய வெள்ளப்பெருக்காக இருப்பதை உணர முடிந்தது.
இந்த நிலையில் குற்றாலம் மேலகரத்தை சேர்ந்த அஸ்வின் என்கிற 16 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் குற்றலாம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
இதனை அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் குற்றாலம் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings