in

ஆசிரியர் சிக்கந்தர்ஷா எழுதிய ‘நுகர்வாய் நகர்வாய்’ புத்தக வெளியீட்டு விழா

சென்னை

சின்ஸியர் ஈவென்ட்ஸ் & சிக்கந்தர் பதிப்பகம் சார்பில் நூல் ஆசிரியரும், உள்ளாட்சி முரசு நாளிதழினி பொறுப்பாசிரியருமான சிக்கந்தர் ஷாவி இரண்டாவது புத்தகமான “நுகர்வாய் நகர்வாய்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை கோட்டுர்புரம், அண்ணா நூற்றான்டு நூலகத்தில் நடைபெற்றது.

விழாவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் பங்கேற்று புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை, பத்மஸ்ரீ பாலம் கல்யாண சுந்தரம்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் மற்றும் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முன்னிலையிலும் பெற்றுக்கொண்டார்கள்.

விழாவில் இஸ்லாமிய இலக்கியங்களில் ஓங்கித் திகழந்த உமறுப்புலவரின் வாரிசுகள் அறக்கட்டளை சார்பில் புத்தக ஆசிரிர் சிக்கந்தர்ஷாவிற்கு ‘கவிச் சித்தர்’ என்று விருதளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர் உள்ளாட்சி முரசு ஆசிரியர் ரிச்சர்டு ஆனந்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதில் உள்ளாட்சி முரசு நாளிதழின் வெளியீட்டாளர் ஜாய்ஸ் ஆனந்த் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர், சேமுமு முகம்மதலி விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள். மெகா டிவி அமுதகானம் புகழ் தோழர் எல்.வி. ஆதவன் புத்தக மதிப்புரையை வழங்கினார்.

ஹாஜி. ருமைசுதீன் ஃபைஜி, இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலையத்தைச் சார்ந்த எம்.கே.இ. உமர் அப்துல் காதர், அறம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.பி.முகம்மது நாசர், சொல்வேந்தன், வங்கி மேலாளார் சி.சித்ரா மற்றும் அல்லி பாத்திமா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்,

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புத்தக வெளியீட்டு விழாவில் உள்ளாட்சி முரசு ஆசிரியருக்கு மரியாதை

அராஜகம் செய்யும் மருத்துவமனைகள்; ஆபத்தில் பொதுமக்கள்