மதுரை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பாஜக சார்பில் நீதிகேட்பு பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் இதனை மீறி மதுரையில் இன்று மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். இதில் குஷ்புவும் பங்கேற்று பேசினார். அப்போது அங்கு வந்த போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற குஷ்பு உள்பட பாஜகவினரை கைது செய்தனர்.
அப்போது பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அப்போது குஷ்பு கூறுகையில், பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று பார்பார்க்கவில்லை. பேரணிக்கு அனுமதி தரமாட்டார்கள் என்பது தெரியும் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings