திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் புழல் வட்டார வளர்ச்சி அலுவலகராக இருப்பவர் மணிசேகர். வட்டார வளர்ச்சித் துறையின் ஜாம்பவான் என்றால் அனைவரும் சுட்டிகாட்டுவது பிடிஓ மணிசேகரையே. இவருக்கு ஆல்இன்ஆல் அழகு ராஜா என்ற பட்டத்தை சூட்டி அழகும் பார்க்கின்றனர். லஞ்சம் வாங்குவதில் மிகவும் திறமைசாலி என்றாலும், இதற்கு ஈடாக மற்றொரு விஷயத்திலும் பலே கில்லாடி என்ற மகுடத்தை சூட்டியுள்ளார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் விஜிலென்ஸில் சிக்கி சின்னாபின்னமாகியும் அடேங்கப்பா என்று சொல்லுமளவிற்கு 49-வது பிறந்தநாளை நண்பர்கள் கேக் வெட்டி மாலை அணிவித்து வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். மேலும் மேலும் இடியாப்ப சிக்கலில் சிக்குவார் என தெரிந்தும் இவருடைய நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாடியது வட்டார வளர்ச்சி அலுவலக (பிடிஓ) ஊழியர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
எது எப்படியோ நமக்கென்ன வம்பு இவர்தானே மாட்டப்கோகிறார் என்று ஒருவருக்கொருவர் பேசிகொண்டனர். ஒரு அரசு அலுவலர் எந்த பொருளையும் பரிசாக பெற்றால் அது லஞ்சமாகவே கருதப்படும். ஆனால் மணிசேகருக்கு அதுபற்றி எல்லாம் கவலை இல்லை. ஏற்கனவே விஜிலென்ஸில் எப்.ஐ.ஆர். பதியப்பட்டிருக்கும் போது மணிசேகர் லஞ்சம் வாங்குவதும், பிறந்தநாள் கொண்டாடுவதும் பெரிது விஷயம் இல்லையாம்.
லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள புழல் பிடிஓ மணிசேகருக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகுடம் சூட்டி அழகு பார்ப்பதை நினைத்து பார்த்தால் நமக்கே சந்தேகம் ஏற்படுகிறது. ஆளுயர மாலை அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் தான் அணிவித்து பார்த்திருப்போம். ஒரு அரசு அலுவலருக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடியது திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதல் முறை என்கின்றனர் சக அலுவலர்கள்.
இவரது ஃபார்முலாவை பின்பற்றி அரசு அலுவலர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இனி பார்க்க முடியும். லஞ்ச ஒழிப்பு போலீசார் புழல் பிடிஓ அலுவலகத்தில் ரெய்ட் நடத்தி இரண்டு மாதங்களாகியும் மணிசேகர் மீது நடவடிக்கை எடுக்காமல் பிறந்தநாள் கொண்டாட வாய்ப்பு அளித்த திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையை சார்ந்த பிஏபிடி மற்றும் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கே வெளிச்சம்…!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings