நீலகிரி:
கரடி நடமாட்டம் இருப்பதாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா வெலிங்டன் நல்லப்பன் தெரு கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் எனவும், குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பாக கழிவறைக்கு செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த ஊர் சங்கத்தின் நிர்வாகிகள் இந்த அறிவிப்பின் மூலம் கேட்டுக் கொண்டனர். மேலும் வனத்துறையினர் இதை கருத்தில் கொண்டு கரடி மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings