கரூர்:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை முன்னிட்டு கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 470 நாட்களாக சிறையில் இருந்துள்ளார்.
அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் உத்தரவிட்டார்.
அதனை அடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings