நீலகிரி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரங்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு சொந்தமான அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பள்ளி மழலைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கைக்கு எதிரான செயல்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனால் பசுமை வாய்ந்த நீலகிரி தற்போது கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது.
மரங்களும் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவதால் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய பருவ மழைகளும் பெய்வதில்லை. பருவத்துக்கு ஏற்றாற்போல் மழை பெய்வதில்லை. சீதோசன நிலையும் தலைகீழாக மாறி வருகிறது.
இதனிடையே குன்னூர் அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள அருவங்காடு தொழிற்சாலை பள்ளியில் பயிலும் மழலையர் மரம் வளர்ப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில் பச்சை நிற ஆடைகள் அணிந்து மரங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் தீமை மற்றும் நன்மைகள் குறித்தும் பதாகைகளை ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மழலைகள் , மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். .
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings