கரூர்:
ரூ.32 லட்சத்தை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தாந்தோணி மலையை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், இவருக்கு சொந்தமாக மணவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி பார்க்கிங் பகுதியில் மனை உள்ளது. கட்டிட பணி தொடர்பாக தர்மலிங்கத்துக்கும் சந்திரசேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் சந்திரசேகருக்கு சொந்தமான ஸ்ரீ பாலாஜி பார்க்கிங் பகுதியில் பிரிக்கப்பட்ட மனையின் ஒரு பகுதியில் வீடு கட்டி அதனை விற்பனை செய்த பிறகு பணத்தை கொடுத்தால் போதும் என்று தர்மலிங்கத்திடம் சந்திரசேகர் கூறியுள்ளதாகவும், அதற்காக முன்தொகையாக ரூ. 6 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும் என்றும் கூறிய ரூ. 6 லட்சம் தொகையை பெற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து தர்மலிங்கம், செலவு செய்து அந்த வீட்டை கட்டியுள்ளார். ஆனால் வீடு கட்டப்பட்ட பிறகு, வீடு கட்ட செலவு செய்த ரூ.32 லட்சம் மற்றும் அட்வான்ஸ் தொகை ரூ.6 லட்சத்தையும் சேர்த்து ரூ.38 லட்சத்தை ஏமாற்று நோக்கத்துடன் சந்திரசேகர் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings