ராமநாதபுரம்,
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சன் தலைமையில் மாநில மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று சென்னையில் நேரில் சந்தித்தனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அலுவலக காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர், கீழக்கரை, ராமநாதபுரம், சித்தர் கோட்டை, பரமக்குடி ஆகிய பள்ளிகளில் உள்ள அலுவலக காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings