ஆவடி:
சென்னை மாங்காடு மலையம்பாக்கம் ரஹமத் நகர் சபாபதி மகன் கண்ணன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 1991 ஆம் ஆண்டு முதல் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.1998 ஆம் ஆண்டு பூந்தமல்லி தாலுகா லட்சுமிபுரத்தில் வட அக்ரஹாரம் பகுதியில் 5497 சதுரஅடி கொண்ட வீட்டு மனையை கணேசன் நாயக்கர் என்பவரிடம் விலைக்கு வாங்கினேன். பொது வழிக்கு இடத்தை கொடுத்தது போக 1038 சதுர அடி இடத்தை தனது மனைவி சிவ குணவாசுகியின் தம்பி ஜெயகார்த்தி என்பவர் 3 பிளாட்டுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டை கட்டி அதில் ஒரு பிளாட் மற்றும் ரூ. 14 லட்சம் தருவதாக கூறியதால் 2012 ஆம் ஆண்டு அவருக்கு பொது அதிகாரம் கொடுத்தேன். ஆனால் ஜெயகார்த்தி எனக்கு தெரியாமல் என்னுடைய இடத்தின் அருகே உள்ள 1004 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி நாலு பிளாட்டுகள் கட்டி மூன்று பிளாட்டுகள் எனக்கு தெரியாமல் விற்பனை செய்து உள்ளான்.
இதைத் தெரிந்த நான் அவனுக்கு கொடுத்த பொது அதிகாரத்தை பவரை ரத்து செய்ய மனு கொடுத்தேன். ஆனால் சார்பதிவாளர் ஒரிஜினல் பத்திரமும் ஜெய கார்த்தியும் நேரில் வர வேண்டும் என்று கூறியதால் அவரை ரத்து செய்ய முடியவில்லை. அதன் பின்னர் பிளாட் கட்டிக் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தான். இதன் மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஆவடி துணை ஆணையர் பெருமாள் முன்னிலையில் போலி ஆவண தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரஜிட் மேரி, தலைமறைவாக இருந்த ஜெய கார்த்தியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings