in

போலி கையெழுத்து மூலம் ரூ.1 கோடி சொத்துகளை ஏமாற்றியவர் கைது

ஆவடி

ஆவடி காவல் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய குற்ற பிரிவில் சென்னை முகப்பேர் கிழக்கு புகழேந்தி தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மனைவி பிரேமா (வயது 67) என்பவர் கடந்த 5.11.2019ம் ஆண்டு கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வரம்பு காரணமாக ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இவருடன் சேர்ந்த வாசுதேவன் மனைவி மாலா, கோபால் மனைவி குணபூஷணம் ஆகியோரும் மனு கொடுத்தனர்.

அதில் பிரேமாவின் தாயார் சாரதாம்பாள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா வில் உள்ள 24 ஏக்கர் 66 சென்ட் கொண்ட இடத்தை பிரேமாவுடன் பிறந்த வாசுதேவன் மனைவி மாலா, கோபால் மனைவி குணபூஷணம், மாசிலாமணி, சரவணன், விஜயலட்சுமி, கோடீஸ்வரன், லோகநாயகி, விஜயலட்சுமியின் மகள் ரமா பிரபா, மன் சசிகுமார், சரவணன் மகள் பிரவீனா ஆகியோருக்கு பாகப்பிரிவினை செய்து கொடுத்துள்ளார்.

சரவணனின் மகன் திவாகர் தாயை இழந்ததால் சாரதாம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்த திவாகர் செட்டில்மெண்ட் சொத்துக்களை மனுதார்களை கையெழுத்தை போலியாக போட்டு அவரது பெயருக்கு மாற்றியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திவாகர் தகப்பனார் பெயர் சரவணன் என்பவன் தாய் இழந்த பிள்ளை என்பதால் சாரதா ம்மாளுடன் வசித்து வந்தான். அப்பொழுது திவாகர் 29.6.2015ல் மனுதாரர்களுக்கு கொடுத்த செட்டில்மெண்ட் சொத்தினை மனுதாரர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ரத்து செய்து12.7.2018ம் ஆண்டு திவாகர் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்துள்ளார்.

இதை தெரிந்த மனு தா ர ர்கள் வழக்கு தொடர்ந்து மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம் சென்று மேற்படி தீர்ப்பின் நகலை கொடுத்து வில்லங்க சான்று போட்டுப்பார்த்த பொழுது திவாகர்  சொத்தினை தசரத ராமி ரெட்டியின் மகன் ஆதிகேசவலு ரெட்டி என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்து மனுதாரர்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும்.

இது சம்பந்தமான புகாரின் மீது நில பிரச்சினை தீர்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி தீவிர விசாரணை மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையாளர் கே.சங்கர், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தலைமறைவாக இருந்த சென்னை மதுரவாயல் கேஜி சிக்கேச்சர் சிட்டியை சேர்ந்த திவாகரை (வயது 33) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: கரூரில் திமுகவினர் கொண்டாட்டம்

ராமநாதபுரத்தில் 50 கிலோ கடல் அட்டைகள் கடத்திய 5 பேர் கைது