in

பேருந்து கட்டணம் உயர்கிறதா? இதோ விளக்கம்

சென்னை

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் மின்சார ஒழுங்குமுறை வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதேபோல் பேருந்து கட்டணமும் உயரும் என்கிற அச்சம் எழுந்தது. தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் கடந்த 2018-ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், டீசல் செலவுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை மாற்றியமைப்பதற்காக ஆணையம் உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்தநிலையில் போக்குவரத்துத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சவுக்கு சங்கர் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை

முடிவுக்கு வந்தது தங்கலான் படப்பிரச்சனை