சென்னை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு வீராசாமியின் மனைவியை ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செயய்ப்பட்டார். இந்த கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னு பாலு, அவரது கூட்டாளிகள் என 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்கிற ரவுடியை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.
இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் மனைவி பொற்கொடியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த மாதம் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings